படத்தின் ஆரம்பமே பாட்டு+சண்டை என்று ஜிவ்வென்று ஏறுகிறது. அந்த 'கற்க கற்க..' பாடலின் இசை, காமிரா, இயக்கம் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. இப்படி ஆரம்பமாகிற படம் திடீரென்று மதுரைப் பக்கம் போய் சட்டென்று ஒற்றை விரலில் திகிலைக் கொடுக்கிறது. அங்கு ஆரம்பிக்கும் ஒரு த்ரில்லை படத்தின் பாதி வரை மட்டுமே இயக்குனர் கெளதம்-ஆல் கொண்டு போக முடிகிறது. திடீரென்று நியூயார்க் செல்லும் ப்ரகாஷ்ராஜ்-ம் அவரது மனைவியும் கொல்லப்படுவது என்று கதை நன்றாகவே ஓடுகிறது. மிகச்சில நிமிடங்களே வந்தாலும் ப்ரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமாக அருமையாக நடித்திருக்கிறார். கமல் - சொல்லவே தேவை இல்லை. அலட்டிக்கொல்லாமல் அற்புதப்படுத்தியிருக்கிறார். DCP என்ற ஒரு பெரிய பதவி அவரை ஒன்றுமே செய்யவில்லை தான்.
படத்தின் கதை பற்றி குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அருமையான கதை தான். திரைக்கதையில் தான் சில இடங்களில் சறுக்கி இருக்கின்றனர். இரண்டாம் பாதியின் முதல் பாதியிலேயே குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் காட்டிவிட்டு அதற்கப்புறமும் படம் ஒரு மணி நேரம் போவது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் ஜோ-கமல் காட்சிகள் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியை ரொம்பவே ஆரம்பிக்கின்றன. அதை அவ்வப்போது இடையிடையே இழையோட விட்டிருக்கலாம். தமிழ் படத்திற்கான அத்தனை இலக்கணங்களையும் உடைத்திருந்தாலும் இந்த ஜோ-கமல் ரொமான்ஸ் வேண்டுமென்றே புகுத்தியது போல் இருந்தது. ஆனாலும் கதைக்கு இது ரொம்பவே தேவைப்பட்டது போலத்தான் இருக்கிறது.
மாயா(ஜோ)வின் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாவல்களில் வரும் கதாபாத்திரம் போல நன்றாகவே கதைக்குள் இழையோடியிருக்கிறது. ஜோவும் ரொம்பவே முயன்றிருக்கிறார். தன்னுடைய மற்ற படங்களில் வசனங்களில் ரொம்பவே கவனம் செலுத்தியிருந்த இயக்குனர் கெளதம் இந்த படத்திலும் அதைத் தவறவில்லை. ராகவனிடம் மாயா சொல்லும் 'சில விஷயங்களை சொல்லாமல் இருக்கிறது தான் நல்லதுன்னு உங்களுக்கு தெரீலல', கஃபே-யில் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வசனங்கள், கயல்-ராகவன் சந்தித்துக்கொள்ளும் கல்யாணக்காட்சி வசனங்கள் எல்லாம் பின்னியிருக்கின்றன. (உ.தா. 'சாப்பாடு தான் அவரோட வீக்னஸ்... இப்போ நானும்...').
யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம்.
பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.
ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.
யாருப்பா அந்த கயல்விழி. அப்படியே இன்னும் மனசில் நிற்கிறார். அதுவும் 'பார்த்த நாள் முதலே...' பாடலில் அப்படி ஒரு ஆக்கிரமிப்பு. பட்டுப் புடவையில் கமலை முதன் முதலாக சந்திக்கும் அந்தக் காட்சியில் நடிக்க கொஞ்ச நேரமே வாய்ப்பு கிடைத்தாலும் பரிபூரணமாகவே பண்ணியிருகிறார் கமலினி முகர்ஜி. தமிழ் சினிமா ரசிகர்கள் இனி வரும் படங்களில் கொடுத்து வைத்திருகிறார்களா என்று பார்க்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை கொஞ்ச நாட்களுக்கு இனி தூங்கவிட மாட்டார் என்றே நினைக்கிறேன்.
பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அருமையாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த த்ரில் காட்சிகள் மற்றும் நியூயார்க் அறிமுகக் காட்சிகள் என்று கலக்கியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே அருமை.
ஒளிப்பதிவாளரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். நியூயார்க்-ஐ தமிழ் படங்களில் இவ்வளவு பிரம்மாண்டமாக அழகாக இதுவரை எவருமே காட்டவில்லை என்றே சொல்லலாம்.
ஆண்டர்சன் - ஆக வரும் அந்த நடிகரும் தன் பங்கிற்கு ரொம்பவே காஷுவலாக வந்து போயிருகிறார். தமிழ் சினிமாவிற்கு இதுவும் புதுசுதான். ஆனாலும் அவரை பட்டுனு போட்டு விடுவதும் தமிழ் சினிமாவிற்கு புதுசு தான்.
அமெரிக்க கதாபாத்திரங்கள் எல்லாம் ஆங்கிலம் பேசுவது படதிற்கு உயிர் ஊட்டுகிறது. நன்றாக நேட்டிவிடி காட்டிருகிறார்கள். அமுதனாக வரும் டேனியல் பாலாஜி பின்னிப் பெடலெடுத்திருகிறார். அப்படி ஒரு நடிப்பு. எப்படி கெளதம் படங்களில் மட்டும் இவருக்கு இப்படி வாய்ப்புகள்!. கடைசி காட்சியில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அமுதன் பேசும் சில வசனங்கள் (நாங்கள் தான் உலகிலேயே மிகச்சிறந்த் டாக்டர்கள்... சாகாவரம் ஆராய்ச்சி...) சைக்கலஜிக்கலாக நன்கு யோசித்து எழுதப்பட்டவை போலத் தோன்றுகின்றன.
கெளதம் கலக்கி இருகிறார். என்றாலும் இன்னும் கூட கலக்கி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. காக்க காக்க மாதிரி வரவில்லை என்று திரையரங்கில் முனுமுனுப்புகள் நன்றாகவே கேட்கின்றன.
மொத்ததில் 'வேட்டையாடு விளையாடு' ரசிகர்களுக்கு நல்ல வேட்டை.
Tuesday, October 10, 2006
வேட்டையாடு விளையாடு
Posted by
Muthu
at
11:28 PM
0
comments
Labels: வேட்டையாடு விளையாடு
Tuesday, October 03, 2006
கேடி
கேடி - படம் எதோ ரொளடி படமாக இருக்கும் என்று எதிர் பார்த்துப் போகிறவர்களுக்கு ஏமாற்றம் தான்.
எதோ ஒரு த்ரில் படம் போல ஆரம்பமாகும் படத்தில் அந்த த்ரில்லை தக்கவைக்க தவறிவிட்டார் இயக்குனர். படத்தின் காதல் காட்சிகளும் ஏனாதானோ என்று தான் இருகின்றன. படத்தில் 2 ஹீரோயின்கள். நடிக்க ரொம்பவே முயற்சித்திருகிறார்கள். ஹீரோ விற்கு நடிக்க, நடனமாட வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும். மொத்தப் படத்தின் கதையை கடைசி 10 நிமிடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். அதற்காக இரண்டரை மணி நேர அவஸ்த்தை ரொம்ப அதிகம் தான்.
இரண்டாவது பாதியில் படத்தின் கொடுமை தாங்க முடியாமல் "பாட்டையாவது போடுங்கப்பா..." என்று ரசிகர்கள் குரல் கேட்கிறது. பாடல் வந்தவுடன் எல்லோரும் 'தம்' அடிக்க வெளியே சென்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு இசையும் கொடுமை.
மொத்ததில் படத்திற்கு யாருமே கைகொடுக்கவில்லை.
"கேடி" ரொம்பவே கடி.
Posted by
Muthu
at
2:30 AM
0
comments
Labels: கேடி
