Friday, September 29, 2006

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல் - பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு chillness எதிர்பார்த்துப் போகிறவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். படத்தில் காதல் இருந்தது... அந்த chillness தான் மிஸ்ஸிங்.

அம்பையில் ஆரம்பமாகிறது கதை. பசுமையை எல்லாம் அள்ள வேண்டிய காமிராவில் அப்போதே அவை எல்லாம் மிஸ் ஆகிவிட்டன. குந்தவையின் கல்யாணம் நிச்சயமாகிற அந்த காட்சிகளே இல்லை. அதுவும் குந்தவை என்கிற பெண்ணின் ஆசைகளை சொல்ல வந்த டைரக்டர் அந்த காட்சிகளைத் தவற விட்டுவிட்டார். பிடிக்காமல் கல்யாணம் பண்ணின அந்த ஜோடி 6 வருஷங்களுக்கு பிறகு என்று கதை ஆரம்பமாக... அந்த 6 வருட ரொமான்ஸும் மிஸ்ஸிங். கடைசியில் ரொமான்ஸை இன்னும் அழகாகவே காட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அந்த குட்டி ஐஸ் யாருப்பா. எல்லோரையும் கவர்ந்து விடுகிறாள். படம் முழுவதுமே காமிராவில் எங்கோ ஒன்று குறைகிறது. அந்த ரிச்னெஸும் லைட்டிங்கும் இன்னும் நிறையவே தேவை. மாருதி ஸுஸூகி ஃபேக்டரி காட்சிகள் எல்லாம் நன்றாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.

படம் முழுக்க பார்க்கும்போது சில காட்சிகள் மனதில் நின்றாலும் படம் முழுதும் அந்த கண்டினுய்டி யும் கன்ஸிஸ்டென்சி யும் இல்லை. படத்தின் அனைத்து முக்கிய காட்சிகளிலும் அழுத்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சில இடங்களில் வார்த்தை மட்டுமே விளையாடி இருக்கிறது. இது வார்தைகளால் விளையாட வேண்டிய கதை தான். ஆனால் சில காட்சிகளில் வசனம் மட்டுமே நன்றாக இருகின்றது. அதுவும் அந்த காட்சிகள் எல்லாம் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வு.

காலேஜ் காதல் காட்சிகள் எல்லாமே இன்னும் கொஞ்சம் அழகாக எடுத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத் தான் இருந்தன. "எனக்கு பயமா இருக்கு கௌதம்...", "நீ மட்டும் பார்க்க வேண்டிய உடம்பை..." - இந்த இரண்டு வசனங்களும் தனித்து நிற்கின்றன. பதிவுத் திருமணத்திற்கு சென்ற பின்னும் ஒரு சின்ன நெருடலுடன் ஐஸ்வர்யா கதாபாத்திரம் "நாம எடுத்த டெசிசன் சரி தானா?" என்று கேட்கிற விதம் ரொம்பவே யதார்த்தம்.

மியூசிக்கும் சொல்லிக் கொள்வது போல் நிறைய இடங்களில் இல்லை.

பூமிகாவை மறுபடியும் கூட்டி வந்து ஒரு நாள் வாழ வைக்க ஜோ சொல்லும் காரணம் ரொமான்ஸின் உச்சம். பூமிகா மற்றும் சூர்யாவின் அந்த ஒரு நாள் கனவு காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கும் கலாச்சாரத்திற்கும் புதிது தான். அது வெறும் கனவு தான் என்பதை சொன்ன விதம் அழுத்தமானதாக இல்லாதது கொஞ்சம் மைனஸ் தான்.

ஜோவின் நடிப்பு நன்றாகவே மெருகேறி இருக்கிறது. அழும் காட்சிகளில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். யாரப்பா அந்த குட்டி ஐஸ். வெளுத்து வாங்கி இருக்கிறார். பூமிகா தனக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருகிறார். சூர்யாவும் அப்படித் தான். வடிவேலு வேண்டுமா என்று கேட்க வைத்திருக்கிறார். ஜோவின் குடும்பத்தை அவ்வளவு பெரிதாகக் காண்பித்தது எதற்கு என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பூமிகாவின் இரண்டாம் பாதி உடைகளில் கச்சிதமாகப் பொருந்தி இருகிறார்.

பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் அந்த காட்சியில் பின்னணி இசை பின்னி இருக்கிறது. கையாள்வதற்கு கடினமான இந்த காட்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருகிறார் இயக்குனர். மூவரின் நடிப்பும் அசத்தலாக உள்ளது இந்த காட்சியில். அந்த ஒரு நாள் வாழ்க்கை என்பதில் நிறைய லாஜிக் இடிக்கிறது இயக்குனரே.

நிறைய இடங்களில் டைரக்டர் நன்றாக எடுத்திருந்தாலும் கன்ஸிஸ்டன்சி இல்லை. தான் தான் கௌதமின் மனைவி என்று ஜோ அறிமுகம் செய்து கொள்ள... "அப்போ நான் யார்..." என்பது போன்ற வசனங்கள் கச்சிதம். ஆனால் அது கூட ஏதோ எடிட்டிங்-ல் பாதியிலேயே கட் ஆன மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்துவது உண்மை தான்.

ஒளிப்பதிவாளரும் டைரக்டரின் வழியிலேயே சென்றிருகிறார். அங்கும் கன்ஸிஸ்டன்சி மிஸ்ஸிங். BGM இல் சொல்லி கொள்வது போல் காட்சிகள் இல்லை, பூமிகா சூர்யாவை பார்க்க வீட்டுக்கு வரும் காட்சியைத் தவிர.

மொத்தத்தில் 'சில்லுனு ஒரு காதல்' சில்லென்று இல்லை. சப்பென்று இருந்தது.

No comments: